1/
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஜனநாயகம்!!
நாங்கள் அல்லாஹ்வுடைய வஹியை மாத்திரம் பின்பற்றக்கூடியவர்கள் அல்லாஹூத்தஆலா கூறுகிறான் : சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ் வைத்தவிர யாருக்குமில்லை (12:40)
எனவே வாழ்கையில் எந்தத்துறையாக இருந்தாலும் அல்லாஹ் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டான் என்று சென்னால் அதற்கு முரணாக சட்டமியற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது பூமியில் உள்ள அத்தனை
பேரும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே அந்த அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக சட்டமியற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படி யாரும் அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக சட்டம் இயற்றினால் அவர்களுக்கு கட்டுப்பட கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது (முஸ்லிம்)
இந்த அடிப்படையின் பிரகாரம் அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களுக்கு முரணாக அடியார்களுடைய சட்டத்தை ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அடியான் அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு மாற்றமாக சட்டம் இயற்ற முடியும் என்றால் இவ்விடயமானது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ள அதிகாரத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதாகும் இது இணைவைத்தலாகும். இந்த அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் என்று தான் ஒரு முஸ்லிம் நம்பவேண்டும். அதே நேரம் அல்லாஹ்வுடைய
சட்டத்திட்டங்களை விட்டு விட்டு அதற்கு முரணான வேறு சட்டங்களிடம்
தீர்ப்புகேட்டுச் செல்பவர்களை அல்லாஹ் விசுவாசியாக அங்கீகரிக்கவில்லை மாறாக நயவஞ்சகர்கள் அவ்வாறு செய்வதாகவும் அல்லாஹ் பின்வறக்கூடிய குர்ஆனிய வசனங்களில் கூறுகிறான் :
உமது ரப்பின்மீது சத்தியமாக! (அவர்கள்) தங்களுக்கு மத்தியில் நடந்த சச்சரவில் உம்மைத் தீர்ப்பாளராக ஏற்று, பின்னர் (நீர்) வழங்கிய தீர்ப்பைத் தங்களது உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் இல்லாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரையில் (அவர்கள்) விசுவாசிகளாக மாட்டார்கள்.(04:65)
(நபியே) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்றவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) தாகூத்திடம் தீர்ப்புக் கேட்டுச்செல்ல விரும்புகின்றனர். அவனை நிராகரிக்கும்படி (ஏற்கனவே அவர்கள்) நிச்சயமாக ஏவப்பட்டுள்ளார்கள். ஷைத்தானோ அவர்களை மிகத் தாரமான வழிகேட்டில் இட்டுச்செல்லவே விரும்புகின்றான். அல்லாஹ் இறக்கியதன்பாலும், அவனது தூதரின்பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் ஒரேயடியாக உம்மை விட்டும் (தங்களை) தடுத்துக்கொள்வதைக் காண்பீர்.(04:60,61)
ஆகவே இதுதான் ஜனநாயகம் பற்றிய எமது அடிப்படை. அத்தோடு அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு முரணில்லாத சட்டங்களை இஸ்லாம் எமக்கு தடைசெய்யவில்லை. அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு முரணான சட்டங்களைப் பொறுத்தவரையில்; நிர்பந்திக்கப்பட்டால் செய்வோமே தவிர அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
கண்ணிமிக்க அல்லாஹ் கூறுகிறான் : எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது (2:233) மேலும் பார்க்க : 16:106
நாங்கள் அல்லாஹ்வுடைய வஹியை மாத்திரம் பின்பற்றக்கூடியவர்கள் அல்லாஹூத்தஆலா கூறுகிறான் : சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ் வைத்தவிர யாருக்குமில்லை (12:40)
எனவே வாழ்கையில் எந்தத்துறையாக இருந்தாலும் அல்லாஹ் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டான் என்று சென்னால் அதற்கு முரணாக சட்டமியற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது பூமியில் உள்ள அத்தனை
பேரும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே அந்த அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக சட்டமியற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படி யாரும் அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக சட்டம் இயற்றினால் அவர்களுக்கு கட்டுப்பட கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது (முஸ்லிம்)
இந்த அடிப்படையின் பிரகாரம் அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களுக்கு முரணாக அடியார்களுடைய சட்டத்தை ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அடியான் அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு மாற்றமாக சட்டம் இயற்ற முடியும் என்றால் இவ்விடயமானது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ள அதிகாரத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதாகும் இது இணைவைத்தலாகும். இந்த அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் என்று தான் ஒரு முஸ்லிம் நம்பவேண்டும். அதே நேரம் அல்லாஹ்வுடைய
சட்டத்திட்டங்களை விட்டு விட்டு அதற்கு முரணான வேறு சட்டங்களிடம்
தீர்ப்புகேட்டுச் செல்பவர்களை அல்லாஹ் விசுவாசியாக அங்கீகரிக்கவில்லை மாறாக நயவஞ்சகர்கள் அவ்வாறு செய்வதாகவும் அல்லாஹ் பின்வறக்கூடிய குர்ஆனிய வசனங்களில் கூறுகிறான் :
உமது ரப்பின்மீது சத்தியமாக! (அவர்கள்) தங்களுக்கு மத்தியில் நடந்த சச்சரவில் உம்மைத் தீர்ப்பாளராக ஏற்று, பின்னர் (நீர்) வழங்கிய தீர்ப்பைத் தங்களது உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் இல்லாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரையில் (அவர்கள்) விசுவாசிகளாக மாட்டார்கள்.(04:65)
(நபியே) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்றவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) தாகூத்திடம் தீர்ப்புக் கேட்டுச்செல்ல விரும்புகின்றனர். அவனை நிராகரிக்கும்படி (ஏற்கனவே அவர்கள்) நிச்சயமாக ஏவப்பட்டுள்ளார்கள். ஷைத்தானோ அவர்களை மிகத் தாரமான வழிகேட்டில் இட்டுச்செல்லவே விரும்புகின்றான். அல்லாஹ் இறக்கியதன்பாலும், அவனது தூதரின்பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் ஒரேயடியாக உம்மை விட்டும் (தங்களை) தடுத்துக்கொள்வதைக் காண்பீர்.(04:60,61)
ஆகவே இதுதான் ஜனநாயகம் பற்றிய எமது அடிப்படை. அத்தோடு அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு முரணில்லாத சட்டங்களை இஸ்லாம் எமக்கு தடைசெய்யவில்லை. அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு முரணான சட்டங்களைப் பொறுத்தவரையில்; நிர்பந்திக்கப்பட்டால் செய்வோமே தவிர அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
கண்ணிமிக்க அல்லாஹ் கூறுகிறான் : எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது (2:233) மேலும் பார்க்க : 16:106
6:116 - மேலும், இப்பூமியில் இருக்கிறவர்களில் பெரும்பாலோருக்கு நீர் வழிப்பட்டால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியைவிட்டு வழி தவறச் செய்துவிடுவார்கள். எண்ணங்களையன்றி அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும் அவர்கள் பொய்யுரைக்கிறார்களேயன்றி வேறில்லை.
ReplyDelete6:119 - பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும் தங்களது மனோஇசசையின் காரணத்தாலும் திட்டமாக வழிகெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன்.
ஜனநாயகம் என்ற போலித்தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதை வலியுறுத்த மேற்கண்ட குர்ஆனிய வசனங்களைவிட் வேறு ஆதாரங்கள் தேவை இல்லை.
ஜனநாயகம் என்பது, பத்துப் பேரில், ஆறு பேர் வாக்களித்து, ஒன்று செல்லாமலாகி, எஞ்சிய ஐவரில், மூன்று கட்சிகள் தலா ஒவ்வொன்றைப் பெற, மிகுதி இரண்டையும் பெற்ற கட்சி ஆட்சி ஏறுவது. இதுதான் மக்களை, மக்கள ஆளும் அதிகாரம் என்பது. பெரும்பான்மை என்ற போலித்தனம். பத்துப் பேரை இருவர் ஆதரவைப் பெற்று ஆளுவதன் மூலம் வெளிப்படுகின்றது. உ்ணமையில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பெயரில் ஆளுவது ஒன்றே போதும், ஜனநாயகத்தின் போலித்தனத்தை, ஏமாற்றை அறிந்து கொள்ள.
இன்னோர் வகையில் மூன்றில் ஒரு கோரத்தைக் கொண்ட சபையொன்றில், பெரும்பான்மை என்ற பெயரில் அறுவர் ஓர் உண்மைக்கு மாறாக கையுயர்த்தி பொய்யை மேடையேற்றுதல். பெரும்பான்மை என்ற பெயரில் நடத்தப்படும் கபட நாடகம்.
ஜனநாயகம் என்பதை சட்டமியற்றும் பண்பாகக் கொள்ள முடியாது. ஏற்கனவே உள்ள சட்டமொன்றினை செயற்படுத்தல். நீதிபதிகள் மூவரில் இருவரின் பாதகமான தீர்ப்பும் தீர்வாகிவிடுவது என்பது ஜனநாயகம் என்ற பெரும்பான்மை தத்துவத்துக்கு உயிர் கொடு்ப்பது, ஏற்கனவே நாட்டில் உள்ள யாப்பை பெரு்பான்மை என்ற வரைவுள் செயற்படுத்துவது. இதனை குர்ஆன் ஏற்பதில்லை.
உலகம் முழுவதும் இணைந்து குர்ஆனிய சட்டத்திற்கு எதிராகத் தீர்ப்புக் கூறினும் அது செல்லுபடியாகாது. உதாரணமாக: இத்தா என்ற காத்திருக்குங் காலம் அல்லது கருவறியுங் காலம் என்பதை, ஜனநாயக வழியில் செயற்படுத்த முடியாது.